Freelancer / 2023 செப்டெம்பர் 12 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி. சகாதேவராஜா
கல்முனை பிரதேசத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த ஐஸ் ஏற்றிய கெப் வாகனம் இன்று(12) செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளாகிள்ளது.

கெப் வாகனத்தின் பின் சக்கரம் வெடித்து இந்த விபத்து இடம் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விபத்து காரணமாக அதிகளவான ஐஸ் கட்டிகள் வீதியில் சிதறியதால். போக்குவரத்து ஒரு சில மணி நேரம் பாதிக்கப்பட்டது.
இதேவேளை வாகனத்தின் சாரதியும் காப்பாளரும் சிறு காயங்களுக்கு உள்ளாகி அருகில் உள்ள கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு கல்முனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .