Editorial / 2022 பெப்ரவரி 23 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்
மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் பலசரக்கு கடை ஒன்றில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட கடை முதலாளி ஒருவரை, கேரளா கஞ்சாவுடன் திங்கட்கிழமை (21) இரவு கைது செய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தெரிவித்தார்.
இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய, மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர், ஏறாவூர் முதலாம் பிரிவிலுள்ள குறித்த பலசரக்கு கடையை முற்றுகையிட்டனர்.
இதன்போது கடை முதலாளி, தனது இடுப்பு பகுதியில் மறைத்து வைத்திருந்த 1,700 கிராம் கேரளா கஞ்சாவை மீட்டதுடன், அவரை கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர் 53 வயதுடையவர் எனவும் இவர் நீண்ட காலமாக கடையில் கஞ்ச வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் பொஸிஸார் தெரிவித்தனர்.
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026