2025 மே 08, வியாழக்கிழமை

களுவாஞ்சிக்குடி பொது நூலகத்தின் கணினி பகுதி திறந்து வைப்பு

Gavitha   / 2015 டிசெம்பர் 13 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்,வா.கிருஸ்ணா  

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென்எருவில் பற்று பிரதேச சபைக்குட்டபட்ட களுவாஞ்சிகுடி பொது நூலகத்தின் கணினி மயப்படுத்தப்பட்ட உசாத்துணைப் பகுதி நேற்று சனிக்கிழமை (12) மாலை திறந்து வைக்கப்பட்டது.

களுவாஞ்சிகுடி முகாமை ஆலைய பரிபாலனசபைத் தலைவர் அ.கந்தவேள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹபீஸ் நஸீர் அஹமட் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு குறித்த பகுதியைத் திறந்து வைத்தார்.

இதன்போது, வாசிகசாலைக்குவரும் வாசகர்களின் நன்மை கருதி சனிக்கிழமையிலிருந்து, இலவச WiFi இணைப்பு வழங்கப்பட்டுள்ளதோடு, களுவாஞ்சிகுடி முகாமை ஆலைய பரிபாலனசபைத் தலைவர் அ.கந்தவேளினால் களுவாஞ்சிகுடி கிராம மக்களிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஒருதொகுதி நூல்களும் நூலகரிடம் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான பி.இந்திரகுமார், ஞா.கிருஷ்ணபிள்ளை, மா.நடராசா, கோ.கருணாகரம், இரா.துரைரெத்தினம், மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கா.சித்திரவேல்,  மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம், பிரதேச சபைச் செயலாளர் திருமதி வ.யாகேஸ்வரி, வாசகர் வட்டத்தினர், கிராம பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X