Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை
Janu / 2023 ஓகஸ்ட் 22 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போது நிலவும் கடும் வரட்சி நிலமை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் குடிநீரைத் தேடிச் செல்லும் விலங்கினங்களும், விபத்தில் சிக்குண்டு உயிரிழப்பதை அவதானிக்க முடிகின்றது. இவ்வாறு அரிய வகை உயிரினங்களும் குடிநீரைத் தேடிச் செல்லும் போது உயிர்களைத் துறக்க வேண்டியுள்ளது.
இந்நிலையில் மட்டக்களப்பு மவாட்டம் மண்மனை மேற்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தற்போதைய கடும் வரட்சியினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் உள்ள கால்நடைகள் உன்னிச்சை – மட்டக்களப்பு பிரதான வீதி ஊடாக தினசரி குடிநீருக்காகவும் உணவுக்காகவும், அலைந்து திரிவதனால் வீதி விபத்துக்கள் அதிகம் ஏற்படுகின்றன.
அப்பகுதியில் இந்நிலைமை இவ்வாறு காணப்படுகின்ற போதிலும், மேய்ச்சலுக்குச் செல்லும் கால்நடைகளை திருடர்களும் மிகவும் சூட்சுமமான முறையில் ஆடு, மாடுகளை களவாடிச் செல்வதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதே வேளை மட்டக்களப்பு நகரில் இருந்து மிக உயரமான இடத்திலுள்ள உன்னிச்சை கிராமத்தில் தினசரி காட்டு விலங்குகளும் தற்போது குடிநீருக்காக கிராமத்திற்குள் வரும்போது அவை வீதியில் செல்லும் கனரக வாகனங்களில் சிக்குண்டு விபத்துக்குள்ளாகி அரிய வகை உயிரினங்களும், ஏனைய கால்நடைகளும் உயிர்ழக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலமை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு செவ்வாய்கிழமை (22) உன்னிச்சை பிரதான வீதியில் அரிய வகை மர அணில் ஒன்று இவ்வாறு விபத்தில் சிக்கி உயிரிழந்ததையும் அவதானிக்க முடிந்தது.
அப்பகுதி மக்களின் வாழ்வாதாரமாக காணப்படும் இந்த கால் நடைகளுக்கு வேண்டிய குடிநீரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழங்க வேண்டும் உடன் முன்வர என்பதே என அங்குள்ள மக்களின் கோரிக்கை விடுக்கின்றனர்.
நிலவும் கடும் வறட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவில் மாத்திரம் 1800 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் ஆறு பிரதேச செயலகப் பிரிவுகளில் ஒன்பது ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
வாகரை வடக்கு, மண்முனை மேற்கு, வெல்லாவெளி, மண்முனை தென்மேற்கு , உள்ளிட்ட பிரதேச செயலக பிரிவுகளில் அதிகளவிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே வேளை மாவட்டத்தின் படுவாங்கரை பகுதில் மேற்கொண்டுள்ள தங்களது விவசாயச் செய்கை, மேட்டுநிலப் பயிற் செய்கை உள்ளிட்ட வாழ்வாதார தொழில்களும் வரட்சியினால் பெரிதும், பாதிக்கப்பட்டுள்ளன.
வ.சக்தி
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
19 minute ago
34 minute ago
1 hours ago