Princiya Dixci / 2021 ஜூன் 23 , பி.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான் , ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாழங்குடா - 03 சவேரியார்புரம், கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதிக்கு அருகாமையிலுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள் இன்று (23) காலை புகுந்த முதலையால்அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டது.
இது தொடர்பில் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு பிரதேச மக்கள் அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து, அப்பகுதிக்குச் சென்று அதிகாரிகள் சுமார் 6 அடி நீளமான குறித்த முதலையை மீட்டு, உன்னிச்சை காட்டுப் பகுதியில் உள்ள குளத்தில் விடுவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .