Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2017 ஒக்டோபர் 22 , பி.ப. 06:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏறாவூர் ஆயுர்வேத வைத்தியசாலைக்குச் சென்ற நோயாளியின் சைக்கிளைத் திருடி, சி.சி.டி.வி கமெராவில் பதிவாகியிருந்த திருடனை, பொதுமக்களின் உதவியுடன் இன்று (02) கைதுசெய்துள்ளதாகவும் திருடப்பட்ட சைக்கிளையும் கைப்பற்றியுள்ளதாகவும் ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் மிச்நகர் பகுதியில் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் ஏறாவூரைச் சேர்ந்த எம். முஹம்மது சாலி (வயது 75) என்பரின் சைக்கிளே திருடப்பட்டிருந்தது.
தனது உடல் அசௌகரியத்துக்குச் சிகிச்சை பெறுவதற்காக மிச்நகர் பிரதேசத்திலுள்ள ஆயுர்வேத மாவட்ட வைத்தியசாலைக்கு அவர் சென்றிருந்த சமயம் நோட்டமிட்டுக் காத்திருந்த திருடன் வயோதிபர் சைக்கிளை வைத்து விட்டு வைத்தியசாலைக்குள் உள் நுழைந்ததும் உடனடியாக சைக்கிளைத் திருடிக் கொண்டு சென்றுள்ளான்.
இந்தக் காட்சிகள் சிசிரிவி காணொளிக் கமெராவில் பதிவாகியிருந்தன.
திருடனை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டிருந்தனர்.
இதனை வைத்து விவரம் தெரிந்தோர் சம்பந்தப்பட்ட நபர் ஐயங்கேணியைச் சேர்ந்தவர் என பொலிஸாருக்குத் தெரியப்படுத்தினர்.
சைக்கிள் திருடனை, நீதிமன்றில் ஆஜராக்க பொலிஸார் முயற்சி மேற்கொண்டுள்ளதோடு, குறித்த நபரால் வேறேதும் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளனவா என்ற விசாரணையிலும் ஈடுபட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago