Suganthini Ratnam / 2016 ஜூன் 20 , மு.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
புராதன மன்னர்கள் காலத்து தொல்பொருள் பொக்கிஷங்களைப் பதுக்கிவைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட நான்கு பேரையும் எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.தியாகேஸ்வரன், ஞாயிற்றுக்கிழமை (19) உத்தரவிட்டார்.
புராதன மன்னர்கள் காலத்து தொல்பொருள்; பொக்கிஷங்களைப் பதுக்கிவைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இச்சந்தேக நபர்களை மட்டக்களப்பு, ஏறாவூர் மிச்நகர் பிரதேசத்தில் சனிக்கிழமை (18) இரவு பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், அவர்களிடமிருந்து அத்தொல்பொருள் பொக்கிஷங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பில் பிராந்திய புலனாய்வுப் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, குறித்த பிரதேசத்தில் சுற்றிவளைப்பு மேற்கொண்டு தேடுதல் நடத்தியபோது, இச்சந்தேக நபர்களிடம் விலை மதிப்பிட முடியாத தொல்பொருள் பொக்கிஷங்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
46 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
2 hours ago
4 hours ago