Suganthini Ratnam / 2016 ஜூலை 18 , மு.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி பொலிஸாரின் வருடாந்த பொலிஸ் பரிசோதனை இன்று திங்கட்கிழமை காலை மஞ்சந்தொடுவாய் ஜீவ ஒளி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் யு.பி.ஏ.டினேஸ் கருணாநாயக்க பரிசோதனைகளை மேற்கொண்டார்.
இதில் காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.பி.வெதகெதர மற்றும் காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
போலிஸாரின் அணி வகுப்பு இங்கு இடம்பெற்றதுடன், பொலிஸ் நிலையப் பரிசோதனை மற்றும் காத்தான்குடி பொலிஸ் நிலையத்துக்குச் சொந்தமான பொலிஸ் வாகனப் பரிசோதனை என்பனவும் இடம்பெற்றன.

20 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
1 hours ago
4 hours ago