2025 மே 23, வெள்ளிக்கிழமை

மின்கம்பத்தில் மோதியது முச்சக்கரவண்டி; மூவர் படுகாயம்

Editorial   / 2017 செப்டெம்பர் 06 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு - கல்லடி மணிக்கூட்டுக் கோபுரச் சந்தியில் முச்சக்கரவண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதுண்டதில் அதில் பயணித்த மூவரும் படுகாமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (05) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ள இவ்விபத்தில், மட்டக்களப்பு, புன்னச்சோலை - குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த  மூன்று இளைஞர்களே படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த இளைஞர்கள், கொக்கட்டிச்சோலை ஆலயத்துக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும் வழியில் அவர்கள் பயணித்த முச்சக்கரவண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதி மருங்கிலிருந்த மின்கம்பத்துடன் மோதியுள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியும் பலத்த சேதமடைந்துள்ளது.

இவ்விபத்துத் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X