Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
வடிவேல் சக்திவேல் / 2018 ஜனவரி 10 , பி.ப. 01:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
காட்டு யானைகள், மக்கள் குடியிருப்புக்களுக்குள் உட்புகாமலிருக்க ஆபிரிக்க நாடுகளில் யானைகள் வரும் வழியில் வரிசையாக உயர்ந்த பனைமரங்களை வளர்த்தல், முட்கள்ளிமரங்களை நடுதல், தேனி வளர்த்தல் போன்ற பல செயற்பாடுள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவற்றுள் ஒரு பரீட்சாத்தமாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் தேனி வளர்ப்புத் திட்டத்தை, இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளை, போரதீவுப்பற்றுப் பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புடன் முன்னெடுத்துள்ளது.
மட்டக்களப்பு, போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் காட்டு யானைகள் அதிகம் ஊடுருவும் கிராமமான யானைகட்டியவெளி கிராமத்திலேயே, இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யானைகள் வரும் இடத்தை மக்களுடாக அடையாளப்படுத்தி, அப்பகுதியில் 500 மீற்றர் தூரத்துக்கு கேபிள் கம்பி பொருத்தி, அதில் 20 மீற்றர் இடைவெளியில் தூண்கள் அமைத்து, அதிலே சிறிய நிழல்பந்தலிட்டு, அவற்றினுள் தேனிக் கூடுகளைக் கொண்ட பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன.
இவ்விடத்தை, யானைகட்டியவெளி கிராமசேவை உத்தியோகஸ்த்தர், செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள், செவ்வாய்க்கிழமை (09) பார்வையிட்டு, மக்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் கேட்டறிந்தனர்.
இந்தச் செயற்றிட்டதினூடான இரண்டு விதமாக யானைகளைக் கட்டுப்படுத்தலாம்.
ஒன்று, தேன் பூச்சுகளின் இங்... இங்... இங்.... என்ற ஒரு வித இரைச்சல் யானைகளின் காதுகளுக்குப் பொருந்தாது. இதனால் வரும் யானை திரும்பிச் செல்லும்.
இரண்டாவது, குறிப்பிட்ட 500 மீற்றர்தூர இடைவெளியில் ஏதாவது ஒரு இடத்தால் யானை கடக்க முற்படும் வேளையில், யானையின் உடம்பு, கேபிள்கம்பியில் பட்டவுடன் அனைத்து தேன்கூடுகளும் களைந்து, யானைகளைத் தாக்கும். இதனால யானை மிரண்டு திருப்பியோடிவிடும்.
இச்செயற்றிட்டத்தில், யானைகட்டியவெளி கிராமத்திலுள்ள 20 குடும்பங்களைச் சேர்ந்த தலா ஓர் அங்கத்தவர் வீதம் 20 நபர்களைத் தெரிவுசெய்து, குறித்த தேன் கூடுகளைப் பராமரிக்கும் பெறுப்பு, அவர்களிடத்தில் வழங்கப்படும்.
குறிப்பிட்ட காலத்துக்கொருமுறை சுத்தமான தேனையும் அவர்கள் அதிலிருந்து பெற்று, வருமானத்தையும் ஈட்டமுடியும்.
இதற்குத் தேவையான அனைத்து பயிற்சிகளையும் துறைசார்ந்தவர்களைக் கொண்டு வழங்க, இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளை திட்டமிட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .