Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 16 , மு.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-யோ.சேயோன்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையானது இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் 275 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
இரண்டு சத்திர சிகிச்சைக் கூடங்கள், சத்திர சிகிச்சை விடுதி, சத்திர சிகிச்சைக்கான நவீன உபகரணங்கள், சிறுபிள்ளை மருத்துவ விடுதி, அதிதீவிர சிகிச்சைப் பிரிவு உட்பட 140 கட்டில்கள் வைக்கக்கூடியவாறு 06 மாடிக் கட்டடமும் நிர்மாணிக்கப்படவுள்ளது.
இதற்கான ஒப்பந்தம் கடந்த வாரம் கொழும்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜுடன் கைச்சாத்தாக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .