2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

விபத்தில் ஒருவர் பலி; ஒருவர் காயம்

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 18 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

களவாஞ்சிக்குடி, களுதாவளைப் பகுதியில் மோட்டார் சைக்கிளும் அதேதிசையில் பயணித்த துவிச்சக்கரவண்டியும் புதன்கிழமை (17) மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளின் பின்னாலிருந்து பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர், களவாஞ்சிக்குடிப் பகுதியைச் சேர்ந்த இரத்தினசிங்கம் திருநாவுக்கரசு என்ற 62 வயதானவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X