2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

விபத்தில் வயோதிபர் பலி

Niroshini   / 2016 ஜூன் 04 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிமுன்மாரி பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 9.00 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாவடிமுன்மாரி ஏற்றம் பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் போட்டிபோட்டி ஓடிய நிலையில் வீதியின் அருகில் நின்ற முதியவர் ஒருவரை மோதியுள்ளன.

இதன்போது, படுகாயமடைந்த வயோதிபர் மகிழடித்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, மோட்டார் சைக்கிளை செலுத்திய இருவரும் படுகாயமடைந்துள்ளதாகவும் அவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X