Suganthini Ratnam / 2016 ஜூன் 19 , மு.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சபேசன்
சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் ஒருவரை மட்டக்களப்பு, வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சங்கர்புரம், கம்பியிறக்கக் கிராமத்தில் சனிக்கிழமை (18) மாலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மேற்படி கிராமத்தில் அமைந்துள்ள மூங்கிலாற்றில் மணல் அகழ்வு இடம்பெறுவதாக பொதுமக்கள் தமக்குத் தகவல் வழங்கினர். இதனை அடுத்து, குறித்த இடத்துக்கு தாம் சென்றபோது, இச்சந்தேக நபர் மூங்கிலாற்றில் மணல் அகழ்ந்து அதை மாட்டுவண்டியில் கொண்டு செல்ல முற்பட்டுள்ளார். இந்நிலையில், மாட்டு வண்டியுடன் இச்சந்தேக நபரைக் கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சந்தேக நபரை களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றத்தில் நாளை திங்கட்கிழமை ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
46 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
2 hours ago
4 hours ago