Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 07 , மு.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி)
மட்டக்களப்பு மாவட்டத்தில் 40 இடங்களில் இன்றையதினம் 8 மணிநேர மின்வெட்டு இடம்பெறுமென இலங்கை மின்சார சபையின் மட்டக்களப்பு அலுவலக மின் பொறியியலாளர் திருமதி மேகநாதன் தெரிவித்தார்.
ஓட்டமாவடி, மீராவோடை, செம்மனோடை, கறுவாக்கேணி, கின்னியடி, சின்னவேம்பு, பாசிக்குடா, கிரான், சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை, சித்தாண்டி, மாவடிவேம்பு, வந்தாறுமூளை, உன்னிச்சை, ஆயித்தியமலை, பங்குடாவெளி, இலுப்பட்டிச்சேனை, மரப்பாலம், கரடியனாறு, இராஜபுரம், கித்துள், கோப்பாவெளி, பெரியபுல்லுமலை, தும்பாஞ்சோலை, ஐயங்கேணி, மிச்சிநகர், தளவாய், மீராகேணி, சதாம்குஸைன் கிராமம், ஹிஸ்புல்லா கிராமம், கொம்மாதுறை, செங்கலடி, களுவங்கேணி, ஏறாவூர், ஆறுமுகத்தான்குடியிருப்பு, தன்னாமுனை, சவுக்கடி, மயிலம்பாவெளி, திருப்பெருந்துறை, ஊறணி ஆகிய இடங்களில் இன்று காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை இம் மின்வெட்டு இடம்பெறவுள்ளது.
இலங்கை மின்சாரசபையின் பராமரிப்பு வேலைகள் காரணமாக இந்த மின்வெட்டு இடம்பெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.
7 hours ago
9 hours ago
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
10 Apr 2026