2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

வவுணதீவில் மாணவியொருவர் கடத்தல்

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 19 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட களிமடு கிராமத்தில் பாடசாலை மாணவி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

களிமடு கிராமத்தைச் சேர்ந்த 18 வயதுடைய காணிவேல் மோகனவதனா (வாவா) என்ற மாணவியே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார் என அம்மாணவியின் தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு வீட்டுக்கு வந்த இனந்தெரியாத நபர்கள் இருவர் கண்ணைக் கட்ன் கடத்திச் சென்றதாகவும் இதுவரையில் தனது மகள் வீடு திரும்பவில்லை எனவும் பொலிஸ் முறைப்பாட்டில் அவர் பதிவு செய்துள்ளார்.
 
இதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனிடமும் குறித்த மாணவியின் தந்தை முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அரியநேத்திரன் எம்.பி, 'கடத்தப்பட்ட பெண்ணின் தந்தை நேற்றைய தினம் காலை 7 மணிக்கு வவுணதீவு பொலிஸில் முறைப்பாடு செய்யச் சென்றபோது இரவு 9 மணிவரை அவரை காக்க வைத்து பொலிஸார் விசாரணை செய்துள்ளனர் என குறிப்பிட்டார்.

  Comments - 0

  • ஜோசியன் Friday, 19 October 2012 11:01 AM

    வேலி பயிரை மேயும் நடவடிக்கை தான்.....போலிஸ் நிலையத்தில் தகப்பனின் இரு மணி நேர காக்கவைப்போ ......?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .