2025 மே 06, செவ்வாய்க்கிழமை

படகை பிடிக்கச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 09 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேவ அச்சுதன்

கடலைலையால் அடித்துச் செல்லப்பட்ட தனது படகினை பிடிக்கச் சென்ற மீனவர்; ஒருவர் வாகரைக் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம், செவ்வாய்க்கிழமை (8) இரவு இடம்பெற்றுள்ளது. திருகோணமலை உப்புவெளியைச் சேர்ந்த எஸ்.சாந்தரூபன் என்ற இனைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

இவரது சடலம் இன்று (9) முற்பகல் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

கடற்கரை அருகில் மது அருந்திக் கொண்டிருந்த நிலையில் மேற்படி இளைஞன் தனது படகு கடல் நீரினால் அடித்துச் செல்லப்படுவதைக் கண்டு அதனை பிடிக்கச் சென்றபோது கடலை அலையால் இழுத்துச்செல்லப்பட்டுள்ளார்.

இவரது சடலம் இன்று காலை கரையொதுங்கியுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X