2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

காட்டு யானை தாக்கி மாணவன் மரணம்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 12 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்,க.ருத்திரன்


மட்டக்களப்பு, உறுகாமம் காட்டுப் பகுதியில் யானை தாக்கி மாணவன் ஒருவன் மரணமடைந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

ஏழாம் தரத்தில் கல்வி பயிலும் உறுகாமம் கிராமத்தைச் சேர்ந்த ஜெமீல் தஸ்லீம் (வயது 12) என்ற மாணவனே காட்டு யானையால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

சடலம் யானைகள் அதிகமாக நடமாடும் உறுகாமக் காட்டிலேயே தற்சமயம் கிடப்பதாக பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற அதேவேளை சடலத்தை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .