2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

பாடுமீன் புகையிரத்தில் படுக்கை அறை பெட்டி இணைப்பு

Super User   / 2013 ஒக்டோபர் 13 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு இரவு நேரம் பயணிக்கும் பாடுமீன் கடுகதி நகர் சேவை புகையிரத்தில் முதலாம் வகுப்பு படுக்கை அறை பெட்டி மீண்டும் இணைக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பினை மட்டக்களப்பு புகையிரத நிலைய அதிபர் ஏ.எல்.எம்.அலிபா தெரிவித்தார். கடந்த ஆறு மாதங்களாக கழட்டப்பட்டிருந்த முதலாம் வகுப்பு படுக்கை அறை பெட்டியே மீண்டும் இணைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த பெட்டி கடந்த 7ஆம்; திகதி திங்கட்கிழமை முதலே இணைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

முதலாம் வகுப்பு படுக்கை அறை பெட்டி இணைக்கப்பட்டுள்ள பாடுமீன் கடுகதி நகர் சேவை புகையிரதம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் மட்டக்கப்பிளிருந்து கொழும்புக்கு பயணிக்கும் என புகையிரத நிலைய அதிபர் ஏ.எல்.எம்.அலிபா குறிப்பிட்டார்.

இந்த பாடுமீன் கடுகதி நகர் சேவை புகையிரம் மட்டக்களப்பிலிருந்து இரவு 8.15 மணிக்கு கொழும்புக்கு புறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X