2025 மே 01, வியாழக்கிழமை

சுயதொழிலுக்கான உபகரணங்கள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 19 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் கணவனை இழந்த பெண்களுக்கும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கும் சுயதொழிலுக்கான உபகரணங்கள் நேற்று திங்கட்கிழமை (18) வழங்கப்பட்டன.

இதன்போது 24 பேருக்கு தையல் இயந்திரங்களும் 9 பேருக்கு மா அரைக்கும் இயந்திரங்களும் 9 பேருக்கு இடியப்பம் தயாரிக்கும் உபகரணங்களும் 2 பேருக்கு சமையல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட் அப்கர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக், மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், காத்தான்குடி பிரதேச செயலக உதவி திட்டமிடல் இணைப்பாளர் கே.கருணாகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

கணவனை இழந்த பெண்களினதும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களினதும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும்  அவர்களின் சுயதொழில் முயற்சியை ஊக்கப்படுத்தவும் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகின்றது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .