2025 மே 03, சனிக்கிழமை

அனர்த்த ஒத்திகை நிகழ்வு

Thipaan   / 2014 ஜூலை 19 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல் 


மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அக்ரெட், கண்டிக்கப் இன்ரெநெஸனல், ஒஸ்பாம், சேவ்தசில்றன், ஆகிய அரச சார்பற்ற அமைப்புக்களுடனும், போரதீவுப்பற்று பிரதேச செயலகத்துடனும் இணைந்து நடாத்திய அனர்த்த ஒத்திகை நிகழ்வு போரதீவுப்பற்று பிரதேசத்தின் ஆனைகட்டியவெளி கிராமத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (18) இடம்பெற்றது.

ஆனைகட்டியவெளி கிராம சேவகர் ந. சத்தியநாராயணனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜன், அக்ரெட் நிறுவனத்தின் மாவட்ட திட்ட உத்தியோகஸ்தர் இ.கஜேந்திரன், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம், வெல்லாவெளிப் பிரதேச இராணுவ பொறுப்பதிகாரி மேஜர் அரசங்க, மற்றும் கிராம பொதுமக்கள்  என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

அனர்த்தம் ஒன்று ஏற்படும் வேளையில் மக்கள் எவ்வாறு பாதுகாப்பாக வெளியேறுதல், தேடுதல்களை எவ்வாறு மேற்கொள்ளுதல், முகாம்களை எவ்வாறு பராமரித்தல், சுகாதர முதலுதவி செயற்பாடுகளை எவ்வாறு நடைமுறைப் படுத்தல் மற்றும் நிவாரண சேவைகளை மேற்கொள்வது தொடர்பாக இதன்போது ஒத்திகை பார்க்கப்பட்டன.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X