2025 மே 20, செவ்வாய்க்கிழமை

காணாமல் போனோரின் இறப்புப் பதிவினை மேற்கொள்ள நடமாடும் சேவை

Menaka Mookandi   / 2015 மார்ச் 12 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் அனுசரணையுடன் ஏற்பாடு செய்யப்பட்ட, காணாமல் போனோரின் இறப்புப் பதிவினை மேற்கொள்வதற்கான நடமாடும் சேவை வெருகல் பிரதேச செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (12) இடம்பெற்றது.

இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் மூதூர் சட்ட உதவி நிலையம், காணாமல் போனோருக்கான தற்காலிக சட்டத்துக்கிண இறப்பு பதிவினை பெற்றுக்கொடுக்கும்; பொருட்டு, பொதுமக்களின் நலன் கருதி இந்த நடமாடும் சேவையினை ஒழங்கு செய்திருந்தது என்று சட்ட உதவி ஆணைக்குழுவின்  மூதூர் நிலைய சட்ட பொறுப்பதிகாரியும் சட்ட உத்தியோகஸ்தருமான ஏ.ருக்ஷானா பானு தெரிவித்தார்.

இந்த நடமாடும் சேவையின் போது, ஏற்கெனவே காணாமல் போனோரின் இறப்புப் பதிவுக்காக விண்ணப்பித்திருந்த 65 பேருக்கான இறப்பு பதிவுகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

இந்நிகழ்வில், சட்ட உதவி ஆணைக்குழுவின்  மூதூர் நிலைய சட்ட பொறுப்பதிகாரியும் சட்ட உத்தியோகஸ்தருமான ஏ.ருக்ஷானா பானு, சட்ட உத்தியோகஸ்தர் எம்.எல்.பைஸர், செயற்றிட்ட உத்தியோகஸ்தர் பே.கோபிகண்ணன் மற்றும் சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட உத்தியோகஸ்தர் எம்.எம்.ஏ.சுபைர், வெருகல் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் ஏ.லதுமீரா, சேருநுவர பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மற்றும் பதிவாளர் பிரிவு அலுவர்கள், பணியாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X