Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2015 மார்ச் 13 , மு.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
அம்பாறை மாவட்டத்தின் அறுகம்பை பாலம் தொடக்கம் உள்ளாசத்துறை பொலிஸ் பிரிவுவரை அல் அக்ஸா மாணவர்களினால் நேற்று வியாழக்கிமை கடற்கரையோரம் சுத்தம் செய்யப்பட்டது.
கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் அம்பாறை மாவட்ட காரியாலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அறுகம்பை கடற்கரையை சுத்தமாக வைத்திருப்போம் எனும் தொனிப்பொருளில் நிகழ்வு நடைபெற்றது.
இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள். நாம் எமது கரையோர பிரதேசங்களை சுத்தமாக வைத்திருக்கவேண்டும். அதனால், எம்மை நாம் பாதுகாக்கமுடியும் என கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் உதவி முகாமையாளர் நீல் பிரியதர்சன தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பொத்துவில் அல் அக்ஸா பாடசாலையின் அதிபர் எம்.ஏ.சி.றஹ்மத்துல்லா, பொத்துவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் கடற்படை அதிகாரிகள் உட்பட பலர்; கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago