2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பாவனைக்குதவாத உணவுகளை வைத்திருந்த மூவருக்கு தண்டம்

Suganthini Ratnam   / 2015 மார்ச் 19 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார சீர்கேடுகளுடன் நடத்தப்பட்ட  உணவக உரிமையாளர்கள்   மற்றும் மரக்கறி விற்பனையாளர்  மூவருக்கு தலா ஆறாயிரம் ரூபாய் படி   மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.என்.அப்துல்லா தண்டம் விதித்தார்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சந்தை மற்றும் வெதுப்பகங்களில் இன்று வியாழக்கிழமை  காலை  திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.  இதன்போது, மனித நுகர்வுக்கு ஒவ்வாத உணவுகளை விற்பனைக்கு வைத்திருந்தமை  மற்றும் தரம் குறைந்த மரக்கறிகளை விற்பனை செய்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இரண்டு வெதுப்பகங்களின் உரிமையாளர்கள் மற்றும் மரக்கறி விற்பனையாளர் ஒருவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக வெட்டுக்காடு பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.அமுதமாலன் தெரிவித்தார்.

அத்துடன்,  இந்த மூவரையும் கடும் எச்சரி;க்கை செய்து விடுவித்ததாகவும் பொதுச்சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X