2025 மே 19, திங்கட்கிழமை

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு

Suganthini Ratnam   / 2015 மார்ச் 22 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு வவுணதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் காசநோய் பற்றிய விழிப்பூட்டல் நிகழ்வு நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.

பாடசாலை மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி செயலமர்வில் நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் உயர் வகுப்பு மாணவர்கள் பங்குபற்றினர்.

இந்த விழிப்புணர்வின்போது  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரி கே.தயாகாந்தன், பொதுச் சுகாதார பரிசோதகர் என்.நரேந்திரகுமார்,  பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.தயாளன் ஆகியோர் கலந்துகொண்டு காசநோய் பற்றியும் அதனை தடுப்பதற்கான வழிகள் மற்றும் சிகிச்சையின் முக்கியத்துவம் பற்றியும் கருத்துக்களையும் விரிவுரைகளையும் வழங்கினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X