2025 மே 19, திங்கட்கிழமை

போசாக்கின்மையை இல்லாதொழித்து ஆரோக்கியமான சமுதாயத்தை கட்டியெழுப்பும் செயற்றிட்டம்

Sudharshini   / 2015 மார்ச் 22 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்    

நூறு நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ், இலங்கையில் போசாக்கின்மையை  இல்லாதொழித்து ஆரோக்கியமான சமுதாயத்தை கட்டியெழுப்பப்படுவதை மையமாகக் கொண்ட செயற்றிட்டத்தின் ஆரம்ப நிகழ்வு குச்சவெளி வைத்திய அதிகாரி காரியாலயத்தில்  சனிக்கிழமை (21) நடைபெற்றது.

இதன்போது கற்பிணித்தாய்மார்களுக்கான போசாக்கு உலருணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

இத்திட்டத்துக்கமைய கர்ப்பம் தரித்து நான்காவது மாதத்திலிருந்து தொடர்ச்சியாக பத்து மாதங்களுக்கு, மாதாந்தம் இரண்டாயிரம் ரூபாய் பெறுமதியான போசாக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்படவுள்ளன.

இத்திட்டத்தின் கீழ் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் 850 க்கும் மேற்பட்ட கர்ப்பிணித்தாய்மார்கள் நன்மை பெறவுள்ளதாக பிரதேச செயலாளர்  எம்.தயாபரன் தெரிவித்தார்.

குச்சவெளி பிரதேச செயலாளர் எம்.தயாபரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வைத்திய அதிகாரி ஜேசுநேசன் கலந்து சிறப்பித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X