2026 மே 07, வியாழக்கிழமை

அழைபேசியை திருடியவர்கள் சிக்கினர்

Editorial   / 2020 பெப்ரவரி 29 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கணேசன்)      

ஹோட்டலுக்கு  வேலைத்தேடிவந்த இருவர், அங்கு பணிபுரிந்த மற்றுமொரு ஊழியரின் அழைபேசியை திருடியச் சம்பவம் பதுளை நகரில் (28) இடம்பெற்றுள்ளது.

மேற்படி நபர்களுக்கு தொழில்வாய்ப்பு வழங்கப்படும் என ஹோட்டல் உரிமையாளர் உறுதியளித்ததையடுத்து - தமக்கு தங்குமிட வசதி இல்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதனையடுத்து ஹோட்டலின் மேல் மாடியில் அவர்கள், தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்பட்டன என்று ஹோட்டல் உரிமையாளர் தெரிவித்துள்தோடு,  ஆடை மாற்றிவிட்டு வருவதாக கூறி, மேல்மாடிக்கு சென்ற இருவரும், திட்டமிட்ட அடிப்படையிலேயே இந்த திருட்டுச் செயலில் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.

இவர்களால் திருடப்பட்ட அழைபேசி 20 ஆயிரம் ரூயாய் பெறுமதியானதெனவும் ,
அழைபேசியை திருடும் காட்சிகள் ஹோட்டலிலுள்ள சீ.சீ.டி.வி கெமராக்களில் பதிவாகியிருந்தாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .