R.Maheshwary / 2022 மார்ச் 09 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ஆராச்சி
புளத்கொஹூபிட்டிய பிரதேசசபையின் கீழ் நிர்வகிக்கப்படும் தகனச்சாலைகளின் நடவடிக்கைகளை நேற்றுடன் இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புளத்கொஹூபிட்டிய பிரதேச சபையின் தவிசாளர் ருவன் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
சடலங்களை தகனம் செய்வதற்கான எரிவாயு தட்டுப்பாடே இதற்கு காரணம் என தெரிவித்துள்ள அவர், எரிவாயு கிடைத்தவுடன் சடலங்களை தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
எனவே, புளத்கொஹூபிட்டிய பிரதேசசபைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள சடலங்களை ருவன்வெல்ல பிரதேசசபையின் அங்குருவெல்ல அல்லது கேகாலையிலுள்ள தகனச்சாலைக்கோ கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
எனவே இதற்காக சடலங்களுக்குரிய உறவினர்கள் மேலதிக கட்டணங்களை செலுத்த நேரிடும் என்றார்.
5 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
18 Jan 2026