Editorial / 2023 மே 02 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஷ்யா, பெலாரஸில் மருத்துவ பீடமொன்றில் 4 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் கண்டியைச் சேர்ந்த மருத்துவ மாணவன் (வயது 24) கடந்த சனிக்கிழமை (29.04.2023) மாணவர் விடுதி அறையொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவர், வருடத்தின் சிறந்த மருத்துவ மாணவனாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கண்டியில் உள்ள பிரபல தனியார் கல்லூரியொன்றில் உயர்தர உயிரியல் பிரிவில் பயின்ற இம்மாணவன் பெலாரஸில் உள்ள மருத்துவ பீடத்தில் சேர்ந்துள்ளார்.
மாணவனின் தாயார் தனது மகனுக்கு தொலைபேசி மூலம் கடந்த சனிக்கிழமை அழைப்பு விடுத்தபோது, அவர் அழைப்புக்கு பதிலளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனை தொடர்ந்து மாணவனின் தாயார் தனது மகனின் மருத்துவ நண்பர்கள் பலரை அழைத்து, தனது மகனுக்கு தொடர்ந்து அழைப்பு விடுத்தும் அவர் பதிலளிக்காததால், அவரை தொடர்புக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது சக மருத்துவ மாணவர்கள் அவர் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்த போது மாணவனின் கழுத்தில் கட்டு ஒன்றும், அறையிலுள்ள உயரமான அலுமாரியில் மறுமூலையில் கட்டப்பட்ட கயிறும் காணப்பட்டது. இது குறித்து மருத்துவ மாணவர்கள் மாணவனின் தாயாருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
2 minute ago
41 minute ago
47 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
41 minute ago
47 minute ago
56 minute ago