Janu / 2023 செப்டெம்பர் 05 , பி.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொகவந்தலாவ, கெர்க்கஸ்வோல்ட் மேல்பிரிவு தோட்டப்பகுதியில் கடந்த மாதத்தில் மாத்திரம் கன்றுகளை ஈன்ற ஐந்துக்கும் மேற்பட்ட பசுமாடுகள் உயிரிழந்துள்ளதாக கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர் கன்றுகளை ஈன்றெடுத்த ஐந்து பசுமாடுகளும் இரண்டு அல்லது மூன்று மணித்தியாலங்களுக்கு பின்னர் உயிரிழந்துள்ளன.
பொகவந்தலாவ பிரதேசத்தில் உள்ள மிருக வைத்தியசாலையில் சுமார் ஆறு மாதங்களுக்கு மேலாக வைத்தியர் ஒருவர் இல்லையென தெரிவிக்கும் கால்நடை வளர்ப்பாளர்கள் கால்நடைகளுக்கு சுகயீனம் ஏற்பட்ட பிறகு ஹட்டன் பகுதியில் உள்ள மிருக வைத்தியசாலையின் வைத்தியருக்கு அறிவிக்க வேண்டியுள்ளது.
அவ்வாறு அறிவித்தாலும் பொகவந்தலாவ பகுதிக்கு வருவதற்கு நான்கு மணித்தியாலங்கள் எடுப்பதாகவும் அங்கிருந்த வைத்தியர் வருவதற்கு முன்னமே கால்நடை இறந்து விடுவதாக கால்நடை வளர்ப்பாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கையை மேற்கொண்டு பொகவந்தலாவ மிருக வைத்தியசாலைக்கு வைத்தியர் ஒருவரையும் நியமிக்கவேண்டுமென கோரிக்கை விடுக்கின்றனர்.
எஸ் சதீஸ்


2 minute ago
28 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
28 minute ago
2 hours ago