Kogilavani / 2015 ஒக்டோபர் 09 , மு.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.தி.பெருமாள்
ஹட்டன் புகையிரத நிலையத்துக்கு முன்பாக தேங்கியுள்ள கழிவு நீரை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மலையகத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக மலை பெய்ததால் மேற்படி புகையிரத நிலையத்துக்கு முன்பாகவுள்ள வீதியில் காணப்பட்ட குழிகளில் கழிவு நீர் தேங்கி காணப்படுகின்றன.
இதனால், பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளதுடன் சுகாதார பிரச்சினையையும் எதிர்கொண்டுள்ளனர். எனவே இக்குழிகளை நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுப்பதுடன் கழிவு நீரையும் அகற்றுமாறு பொதுமக்கள் கோரியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .