2026 ஜனவரி 21, புதன்கிழமை

காணாமல்போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

Kogilavani   / 2021 மே 12 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

ஹட்டன் எபோட்ஸிலி தோட்டத்தில், காணாமல் போயிருந்த 48 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தை, இன்று (12) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சின்னையா குமார் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேற்படி நபரை நேற்று(12)  முதல் காணவில்லை என்றுத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அவரது உறவினர்களும் பிரதேச மக்களும் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையிலேயே, அவரது வீட்டிலிருந்து 100 மீற்றர் தூரத்தில்  சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பிரேதப் பரிசோதனைக்காக சடலம் வைத்தியசாலைக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X