2026 மே 01, வெள்ளிக்கிழமை

குடிநீருக்குத் தட்டுப்பாடு

Editorial   / 2019 பெப்ரவரி 04 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி. பெருமாள்

மலையகத்தில் நீடித்துவரும் வரட்சியான வானிலை காரணமாக, மஸ்கெலியா பிரவுன்சிக், புது தோட்டப் பிரிவைச் சேர்ந்த 400 குடும்பங்கள், குடிநீர் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர்

தோட்ட நிர்வாகத்தால், குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தாலும்கூட, போதியளவு நீர் அதுவும் சுத்தமான குடிநீர் வழங்கப்படுவதில்லை என்று, தோட்ட மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மேலும் தண்ணீர் தாங்கியிலுள்ள இயந்திரம் அடிக்கடி பழுதடைவதால், அதனை சீர்திருத்த பெருந்தொகைப் பணத்தை செலவிடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே, தமக்கு சுத்தமான, போதியளவு நீரைப் பெற்றுக்கொடுப்பதற்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டுமென்று, பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .