Kogilavani / 2021 பெப்ரவரி 23 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
தலவாக்கலை கிறேட்வெஸ்டன் கல்பா டிவிசனில், இன்று (23) காலை 10.00 மணியளவில், குளவிக்கொட்டுக்கு இழக்காகிய எட்டு பேர், லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேயிலைக் கொழுந்துப் பறித்துக்கொண்டிருந்தவர்களே, குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
தேயிலைச் செடிகளிலிருந்து குளவிகள் இவர்களைக் கொட்டியுள்ளன.
குளவிக் கொட்டுக்குள்ளானவர்களில், ஆறு பெண் தொழிலாளர்களும் இரண்டு ஆண் தொழிலாளர்களும் உள்ளடங்குகின்ற நிலையில், இரு ஆண் தொழிலாளர்கள் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.
ஏனைய ஆறு பெண்களும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.


21 minute ago
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
21 Jan 2026
21 Jan 2026