Editorial / 2020 ஜூன் 17 , பி.ப. 12:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ்
பொகவந்தலாவ லின்போட், கொட்டியாகல என்.சி.ஆகிய தோட்டங்களில், இன்று ( 17) காலை, குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் ஐவர் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று, பொலிஸார் தெரிவித்தனர்.
லின்போட் தோட்டத்தில் மூன்று தொழிலாளர்களும் என்.சி.தோட்டத்தில் இரண்டு தொழிலாளர்கள் உள்ளடங்களாக ஐவரே, குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
கொட்டியாகலை என்.சி தோட்டத்தில் உள்ள பெண் தொழிலாளி ஒருவருக்கு, அதிகக் குளவிகள் கொட்டியதால் அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று, வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

2 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago