2025 ஜூன் 23, திங்கட்கிழமை

கைதி சடலமாக மீட்பு

Sudharshini   / 2015 செப்டெம்பர் 03 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

சி.எம் ரிஃபாத்

திறப்பணை பொலிஸ் நிலைய சிறைக்கூண்டிலிருந்து கைதியொருவர் இன்று வியாழக்கிழமை (03) அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்  என திறப்பணை பொலிஸார்  தெரிவித்தனர்.

எப்பாவெல  பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய மேற்படி சந்தேக நபர், சட்டவிரோதமாக மதுபானம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் செவ்வாய்க்கிழமை  (02) மாலை  6 மணியளவில்; கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இவர்; தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்தனர்.

இவரின் மரணம் தொடர்பாக  விசாரணைகள் நடைபெற்றுவருவதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .