Niroshini / 2021 மே 09 , பி.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மெய்யன்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன மலையக சேவையுடன் இணைந்து மத்திய மகாண கல்வித் திணைக்களம் நடத்தும் க.பொ.த.சாதாரணதர மாணவர்களுக்கான விசேட கல்வி ஒலிபரப்புச் சேவை, இம்மாதம் 15ஆம் திகதி முதல் தினமும் மாலை 6.30 மணிமுதல் 7.30 மணிவரையில் இடம்பெறவுள்ளது.
'குறிஞ்சி குருகுலம்' என்ற பெயரில் 90.1,107.3,107.5 ஆகிய அலைவரிசைகளில் இந்நிகழ்ச்சியைக் கேட்டு மாணவர்கள் பயன்பெறலாம் என மத்திய மாகாண உதவிக் கல்விப் பணிப்பாளர் பெரியதம்பி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இவ் வானொலி நிகழ்ச்சியைக் கேட்டு மாணவர்கள் பயன்பெறுவதற்கான வழிகாட்டல்களை ஆசிரியர்களும் அதிபர்களும் சமூகநலன் விரும்பிகளும் சமூகப்பொறுப்பு மிக்கவர்களும் மேற்கொள்ள வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.
கபொ.த.சாதாரன பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான சகல பாடங்களுக்குமான வழிகாட்டல்கள், துறைசார் நிபுணத்துவம் பெற்றவர்களால் வழங்கப்படவுள்ளன.
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago