2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி

Sudharshini   / 2016 மார்ச் 08 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.புஸ்பராஜ்

லிந்துலை, டயகம சந்திரிகாமம் தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காக,  மேற்படி தோட்டத்தைச் சேர்ந்த பெருமாள் லெட்சுமன் (வயது 77) என்ற 09 பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று (07) மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளதென டயகம பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மேற்படி முதியவர் அக்கரப்பத்தனை வெவர்லி தோட்டத்திலுள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு, மீண்டும் வீடு திரும்பி வரும் வழியிலேயே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.

 சடலம் பிரேத பரிசோதனைக்காக டயகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .