2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

டிலரி மக்களின் வீடுகள் சீர் செய்யப்படும்

Editorial   / 2020 ஏப்ரல் 16 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்

நோர்வூட், சென்ஜோன் டிலரி கீழ்ப்பிரிவு தோட்டப் பகுதியில், நேற்று முன்தினம் (14) பெய்த கடும் மழை, காற்று காரணமாக பாதிக்கப்பட்ட 27 குடும்பங்களின் குடியிறுப்புகள, அனர்த்த இடர்முகாமைத்துவ அமைச்சின் கீழ் சீர் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு, நுவரெலியா மாவட்ட செயலாளர் ரோகன புஸ்பகுமாரவுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், நேற்று (15) சம்பவ இடத்துக்கு விஜயம் செய்திருந்த போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நேரடியாக அலைபேசி மூலம் தொடர்புகொண்டு இது தொடர்பாக தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .