Editorial / 2018 டிசெம்பர் 27 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ், எஸ்.கௌசி, எஸ்.சுஜிதா, எஸ்.கணேசன், எஸ்.சதிஸ்
தலவாக்கலை ரயில் நிலையத்துக்கு அருகிலிருந்து, சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஆணொருவரின் சடலத்தை, தலவாக்கலை பொலிஸார், இன்று (27) காலை மீட்டுள்ளனர்.
மேற்படி பகுதியில் சடலமொன்று கிடப்பதாக, பொலிஸாருக்கு வழங்கப்பட்டத் தகவலையடுத்தே, சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவரின் நெத்தியில் காயங்கள் காணப்படுவதாகத் தெரிவித்த பொலிஸார், பிரேதப் பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில், சடலம் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் பெயர் விவரங்கள் தெரியவில்லை என்றும் இது தொடர்பில், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.
38 minute ago
42 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
42 minute ago
2 hours ago