Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Sudharshini / 2015 ஒக்டோபர் 07 , பி.ப. 07:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.சங்கீதன்
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கும்; அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டுள்ள கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன், பரீட்சையில் சித்தியடையாதவர்களை உற்சாகப்படுத்தவேண்டும் என்றும் தெரிவித்தார்.
கல்வி அமைச்சில் நேற்று (07)இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு, பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்,
'பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை நாம் எந்தளவுக்கு பாராட்டுகின்றோமோ, அதேபோன்று பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களையும் பாராட்டி அவர்களுக்கு உற்சாகமளிக்க வேண்டும். பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களைக் குறை கூறுதல் அல்லது அவர்களுடைய மனதைப் பாதிக்கும் வகையில் பெற்றோர்கள் மற்றும்; ஆசிரியர்கள் நடந்து கொள்ளக்கூடாது.
பரீட்சைக்கு மாணவர்கள் தோற்றுவது தன்னம்பிக்கையுடன் வரவேற்கக்கூடிய விடயமாகும். விசேடமாக பெற்றோர், பிள்ளைகளை உற்சாகப்படுத்த வேண்டும். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையாத பல மாணவர்கள் இன்று கல்வியில் உயர்ந்த நிலையில் இருப்பதை நாம் காண்கின்றோம்.
எனவே, இது ஒரு பரீட்சை மாத்திரமேயாகும். இது மாணவர்களின் வாழ்க்;கை அல்ல. பாடசாலைகளில் பாராட்டு விழாக்களை ஏற்பாடு செய்கின்றபோது, இந்த பரீட்சையில் தோற்றிய அனைத்து மாணவர்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும்.
விசேடமாக பாடசாலை நிர்வாகம் இவ்வாறான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கின்றபோது, சித்தியடைந்த மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற முக்கியத்துவத்தை, அங்கு பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கும் வழங்குவதை உறுதிசெய்து கொள்ள வேண்டும்' என அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
1 hours ago