2026 ஏப்ரல் 05, ஞாயிற்றுக்கிழமை

நோர்வூட்டில் நீரில் மூழ்கி மாணவன் மரணம்

Editorial   / 2026 ஏப்ரல் 04 , பி.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள் நோர்வூட் கெசல்கமுவ ஓயாவில் மாணவன் நீரில் மூழ்கி மாயம். காசல்ரி நீர்த்தேக்கத்தில் நீரை வழங்கும் பிரதான கங்கைகளான கெசல்கமுவ ஓயாவில் நீராட சென்ற பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளான். இவ்வாறு காணாமல் போன சிறுவன் நோர்வூட் தோட்டத்தை சேர்ந்த 16 வயது மாணவன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் இன்று மதியம் கெசல்கமுவ ஓயாவில் உள்ள 'சில்வர் வாலா' என்ற இடத்தில் இடம் பெற்று உள்ளது. தனது நண்பர்கள் சிலருடன் குளிக்கச் சென்றுள்ளார். அங்கு அவர் நீரில் மூழ்குவதைக் கண்ட அவரது நண்பர்கள், அவரைக் காப்பாற்ற கடுமையாக முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. இருந்த போதிலும் பலன் இல்லாமல் போய் விட்டது. இருப்பினும், அந்த இடத்தின் அதிக ஆழம் காரணமாக, அவர்களின் முயற்சிகள் தோல்வியடைந்து, அந்த மாணவர் நீருக்கடியில் மூழ்கிவிட்டார். நண்பர்கள் அளித்த தகவலின் பேரில், நோர்வூட் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து, உள்ளூர் மக்களின் உதவியுடன் காணாமல் போன மாணவரைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளது. விடுமுறை நாளில் நண்பர்களுடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிக்கச் சென்ற இந்த சிறுவனின் துரதிர்ஷ்டவசமான இந்த சம்பவம் நோர்வூட் பிரதேசத்தை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தொடர்ந்து நோர்வூட் பொலிசார் மற்றும் நோர்வூட் தோட்ட தொழிலாளர்கள் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .