R.Maheshwary / 2021 நவம்பர் 02 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுள்ள நல்லிணக்கத் திட்டங்கள் குறித்து, இலங்கை மற்றும் மாலத்தீவுக்கான பிரான்ஸ் நாட்டின் தூதுவர் எரிக் லாவெர்டுடன், பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான் நட்புரீதியாக கலந்துரையாடினர்.
இலங்கையின் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் முதலாம் ஆண்டு வருடாந்த மாநாடு BMICH கேட்போர் கூடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட போதே, இந்த நட்புரீதியான கலந்துரையாடல் இடம்பெற்றது.
அத்துடன், இலங்கையில் உள்ள ஜப்பான் தூதரகத்தின் அரசியல் பிரிவு செயலாளர் அகிரா ஹோகமுராவுடன் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்தும் இதன்போது செந்தில் தொண்டமான் கலந்துரையாடியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .