2025 மே 15, வியாழக்கிழமை

நானுஓயா விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிதியுதவி

Freelancer   / 2023 மார்ச் 04 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி சந்ரு 

ஜனவரி 20ஆம் திகதி நானுஓயா - ரதெல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழு பேர் உயிரிழந்ததுடன் 53 பேர் படுகாயமடைந்திருந்தனர். 

இதில் உயிரிழந்த  குடும்பத்தினருக்கு கொழும்பு தர்ஸ்டன் கல்லூரியில் அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க ஆசிரியர்கள் மாணவர்களிடம் சேர்க்கப்பட்ட 14 இலட்சம் நிதி உதவி இன்று வழங்கப்பட்டது .

இதில்  உயிரிழந்த ஒவ்வொரு  குடும்பத்தினருக்கு இரண்டு இலட்சம் ரூபாய் வழங்கினர் .

வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் சிறுமியின் வங்கி கணக்கில் கல்லூரியில் காப்புறுதி திட்டம் ஊடாக 8 இலட்சம் ரூபாய் வைப்பிலிடப்பட்டது.

இறந்தவர்களின் திதி கொடுப்பதற்கான செலவினையும் கல்லூரி ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .