Kogilavani / 2021 மே 10 , பி.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
நுவரெலியா மாவட்டத்தில், 17ஆவது கொரோனா மரணம் நேற்று மாலை (10) பதிவாகியுள்ளது.
இராகலை பொது சுகாதார பிரிவுக்கு உட்பட்ட சமஹிபுர கிராமத்தில், 68 வயதுடைய பெண் ஒருவர், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டது.
இந்நிலையில் அப்பெண் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார் என்று, இராகலை பிரதேச பொது சுகாதார பரிசோதகர் ஆர்.எம்.கருணாரத்ன தெரிவித்தார்.
இப்பெண்ணின் மரணத்தோடு இராகலை பொது சுகாதார பிரதேசத்தில் மூன்றாவது மரணம் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் இராகலை பொது சுகாதார பரிசோதகர் பிரிவில், கடந்த (08)ஆம் திகதி மாத்திரம் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும் இவர்களுடன் தொடர்பைப் பேணிய 38 குடும்பங்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
19 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
2 hours ago
2 hours ago