2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பஸ் இயந்திரத்தில் யூரியா போட்டவருக்கு வலை

Editorial   / 2025 ஓகஸ்ட் 15 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா டிப்போவிற்கு சொந்தமான நிறுத்தப்பட்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் இயந்திரத்தில் யூரியா உரத்தை வைத்த நபரை கைது செய்ய நுவரெலியா   பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நுவரெலியாவிலிருந்து ஹைபோரஸ்டுக்கு   தினமும் இயக்கப்படும் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர், கடந்த 12 ஆம் தேதி இரவு, ஹைபோரஸ்டில் நிறுத்தப்பட்டிருந்தபோது, ஒருவர் பேருந்திற்குள் நுழைந்து, இயந்திர மூடியை அகற்றி, யூரியா உரம் என சந்தேகிக்கப்படும் ஒரு ரசாயனப் பொருளை அதற்குள் போட்டதாக ஹைபோரஸ்ட் பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளனர்.

பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் அளித்த புகாரில், இரவில் பேருந்து நிறுத்தப்பட்டு, காலையில் பேருந்தை இயக்குவதற்கு முன்பு இயந்திர எண்ணெயைச் சரிபார்க்க இயந்திர மூடியைத் திறந்தபோது, பேருந்தின் இயந்திர மூடி அகற்றப்பட்டு இருந்ததாகவும், வெள்ளை யூரியா உரத்தைப் போன்ற ஒரு ரசாயனப் பொருள் அருகில் விழுந்து கிடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நுவரெலியா டிப்போவின் மேலாளரிடம் விசாரித்தபோது, யாரோ ஒருவர் அல்லது குழு இயந்திரத்தில் யூரியா உரத்தை வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். அதன்படி, பேருந்தை ஸ்டார்ட் செய்யாமல் என்ஜினை அகற்றி ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .