2024 ஜூலை 27, சனிக்கிழமை

பஸ் விபத்தில் இருவர் படுகாயம்

Janu   / 2024 மே 15 , பி.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி - பதுளை பிரதான வீதியில் புதன்கிழமை (15) மாலை 3.00 மணியளவில் இடம் பெற்ற வீதி விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பெல்மதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி சென்ற தனியார் பஸ்ஸும் இறக்குவானையிலிருந்து இரத்தினபுரி வந்த தனியார் பஸ் ஒன்றுமே இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்குளாகியது .

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி சென்ற பஸ் அதிவேகமாக வந்த காரணத்தினாலயே இவ்  விபத்து இடம் பெற்றுள்ளதாகவும் பஸ் சாரதிகள் இருவரையும்  கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

உமாமகேஸ்வரி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .