Janu / 2024 மார்ச் 28 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்தினபுரி புதிய நகர பூங்கா (New Town Park) அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு புதன்கிழமை (27) சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவின் திசாநாயக்க மற்றும் மாகாண சபைகள் உள்ளூராட்சி இராஜங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது.
மேற்படி இரத்தினபுரி புதிய நகர பூங்கா அமைப்பதற்காக அரசாங்கத்தின் மூலம் 1000 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் மேற்படி கட்டுமான பணிகள் அனைத்தும் சப்ரகமுவ மாகாண சபையும், இலங்கை இராணுவமும் இணைந்து மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரத்ன, சப்ரகமுவ மாகாண சபையின் தலைவர் கஞ்சன ஜயரத்ன, சப்ரகமுவ மாகாண பிரதான செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய, சப்ரகமுவ மாகாண சபையின் பிரதான அமைச்சின் செயலாளர் பிரபாத் உதாகர, இரத்தினபுரி மாவட்ட செயலாளர் வசந்த குனரத்ன உட்பட அரச மற்றும் தனியார்துறை அதிகாரிகளும் கலந்துக்கொண்டுள்ளனர் .
சிவா ஸ்ரீதரராவ்


5 minute ago
12 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
12 minute ago
1 hours ago
2 hours ago