Janu / 2025 மார்ச் 04 , பி.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த 27 திகதி நுவரெலியா - நானுஓயா, பால்மர்ஸ்டன் தோட்டத்தில் இருந்து இறந்த புலியொன்று மீட்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டுக்குப் பிறகு நுவரெலியா வனவிலங்கு சரணாலயத்தில் காணப்பட்ட முதல் புலி மரணம் இதுவாகும் எனவும், வேறொரு விலங்குடன் ஏற்பட்ட மோதலின் விளைவாக இந்த புலி இறந்திருக்கலாம் எனவும் , வனவிலங்கு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
குறித்த புலி 1-2 வயதுக்குட்பட்ட பெண் விலங்கு என்றும், நுவரெலியா வனவிலங்கு அலுவலகம் இது தொடர்பாக விசாரணைகள் மேற்கொண்டு அறிக்கைகளை நுவரெலியா நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக ரந்தெனிகல கால்நடை பிரிவுக்கு அனுப்பப்படும். என தெரிவிக்கப்படுகிறது.

13 minute ago
27 minute ago
42 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
27 minute ago
42 minute ago
59 minute ago