Editorial / 2023 ஜூலை 02 , பி.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவங்ச
மரணவீட்டுக்குச் சென்றிருந்த பிரபல சட்டத்தரணி, மயங்கிவிழுந்து மரணமடைந்த சம்பவமொன்று பண்டாரவளையில் இடம்பெற்றுள்ளது.
பண்டாவளை நகரில், ஜூலை 1ஆம் திகதி பிற்பகல் மரணவீடொன்றில் மரண சடங்குகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தன. அதில் பங்கேற்றிருந்த கொழும்பு மருதானையைச் சேர்ந்த பிரபல சட்டத்தரணியான பிரியந்த பாலசிங்ஹ என்பவரே மயங்கிவிழுந்துவிட்டார்.
அவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதிலும், மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்து விட்டார் என்பது கண்டறியப்பட்டது. பண்டாரவளையில் உள்ள பிரபல வர்த்தகரின் மரண வீட்டுக்கே இந்த சட்டத்தரணி வருகைதந்திருந்தார்.
கொழும்பில் மரணித்த பிரபல வர்த்தகரின் சடலம் அமரர்ஊர்த்தியில் பண்டாரவளைக்கு எடுத்துவரப்பட்டது. அந்த வாகனத்திலேயே சட்டத்தரணியின் சடலம் கொழும்புக்கு எடுத்துவரப்பட்டது.
8 minute ago
12 minute ago
25 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
12 minute ago
25 minute ago
9 hours ago